யாழ்.கரந்தன் பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையில் மரம் கடத்திய ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கரந்தன் பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனையில் மரம் கடத்திய ஒருவர் கைது!

சட்டவிரோதமாக வேப்ப மர குற்றிகளை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வேப்ப மர குற்றிகளும், அதனை கடத்திவந்த வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்யைடுத்து கரந்தன் சந்தியில் பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனம் மடக்கப்பட்டுள்ளது. 

இதன்போது வேப்பமரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும், வேப்பமரக் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு