பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்!

ஆசிரியர் - Admin
பாதுகாப்பு நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்!

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே பாதுகாப்பு ஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு