கடலில் மூழ்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
கடலில் மூழ்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!

யாழ்.குருநகரில் நேற்றுமுன்தினம் இரவு கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருநகரைச் சேர்ந்த 40 வயதுடையஅலோசியஸ் ஜான்சன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மீன் பிடிப்பதற்காக கடலில் இறங்கிய குறித்த நபர் வலை வீசி மீன்பிடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை என்று தேடிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு