யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொிவித்திருக்கின்றது. 

கரவெட்டி, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மருதங்கணி மற்றும் சாவச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக ஏற்பட்டுள்ளது. 

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் கூடுதலான பாதிப்பாக 201 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 

பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெயர்ந்த 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 72 பேரும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 171 பேர் வெள்ளம் காரணமாக பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டு 

அவர்களுக்குரிய சமைத்த உணவு மற்றும் தங்குமிடவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு