யாழ்.இந்திய துணைத் துாதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 பேர் கைது! தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணைத் துாதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 பேர் கைது! தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு..

யாழ்.இந்திய துணைத் துாதரகம் மீது போத்தல்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது கடந்த புதன்கிழமை இரவு போத்தல் ஒன்றினை வீசி தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் கார் ஒன்றில் வந்தவர்களே 

தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வந்ததை அடுத்து, காரினை அடையாளம் கண்டு அன்றைய தினம் காரினை ஓட்டியவர் 

மற்றும் காரில் இருந்த இருவர் ஆகிய மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு