14ம் திகதிவரை கனமழை தொடரும் வாய்ப்பு! யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
14ம் திகதிவரை கனமழை தொடரும் வாய்ப்பு! யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வங்காள வரிகுடாவில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக 112 கி.மீ. தொலைவில் (நேற்று நண்பகல் 12 மணி தகவல்) வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. 

தற்போதைய நிலையில் இது யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை ஊடறுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இதனால் எமக்கு பாதிப்பு கிடையாது. வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

இந்த மழை எதிர்வரும் 14.11.2022 வரை தொடர வாய்ப்புள்ளது. மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு