வீடு உடைத்துக் கொள்ளை! யாழ்.கட்டுவனை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
வீடு உடைத்துக் கொள்ளை! யாழ்.கட்டுவனை சேர்ந்த 20 வயது இளைஞன் கைது..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றினை உடைத்து வீட்டிலிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கட்டுவன் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் வீட்டில் திருடப்பட்ட தொலைக்காட்சி, 

நீர் இறைக்கும் இயந்திரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு