எரிபொருட்களின் விலை இன்று தொடக்கம் அதிகரிப்பு!

ஆசிரியர் - Editor I
எரிபொருட்களின் விலை இன்று தொடக்கம் அதிகரிப்பு!

எரிபொருட்களின் விலை இன்று அதிகாலை தொடக்கம் உயர்த்தப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

இதன்படி டீசல் (1 லீற்றர் ) 15 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ. 430/- ரூபா என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் (1 லீற்றர் ) ரூ. 25 ஆல் அதிகரித்துள்ளதோடு, அதன் புதிய விலை ரூ. 365/- ரூபாவாகும்.

எனினும் பெற்ரோல் உள்ளிட்ட ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்க்பபட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு