யாழ்.தீவகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை! இரு கொள்ளையர்களை 60 பவுண் நகையுடன் மடக்கியது பொலிஸ், நகை வியாபாரிகள் இருவரும் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை! இரு கொள்ளையர்களை 60 பவுண் நகையுடன் மடக்கியது பொலிஸ், நகை வியாபாரிகள் இருவரும் கைது..

யாழ்.தீவகத்தின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் சுமார் 60 பவுண் தங்க நகைகளுடன் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பகல் நேரங்களில் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடனும், 

வேலணை, அராலி, புங்குடுதீவு, காரைநகர் பகுதியில் கடந்த காலங்களில் பகல் வேளையில் வீடுடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடனும் சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக தொியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.கொட்டடி பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதானவர்கள் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். மேலும் கொள்ளையர்களிடம் நகை வாங்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்கள் இருவருக்கும் 16 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 60 பவுண் நகையும் ஒருதொகை பணமும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது அராலி வீதி வேணையில் 20 பவுண், வங்களாவடி7 1/2 பவுண், சுருவில்13 பவுண், புங்குடுதீவு 3 பவுண்,  முழங்காவில்11 பவுண், 

நகைகளும் காரைநகரில் வீடு உடைத்து திருடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புகொண்டுள்ளதோடு சந்தேக நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் 

திருடப்படும் நகைகளை விற்று அந்த பணத்தினை கொண்டு போதை பொருளை கொள்வனவு செய்வதாகவும் வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடுகளில் இறங்கி நீண்டகாலமாக சுதந்திரமாக திருட்டில் ஈடுபட்டு வந்தமையும்

அம்பலமாகியுள்ளதாக  பொலிஸார் தொிவித்துள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 

 விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு