யாழ்.அரியாலை தபால்கட்டை சந்தியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை தபால்கட்டை சந்தியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்.அரியாலை - தபால்கட்டை சந்தியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய வாள்வெட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வீதியில் நின்றிருந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடைக்குள் வாள் ஒன்றை மறைத்து எடுத்துவந்து,

தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு