யாழ்.கோப்பாயில் வீடு புகுந்து வயோதிப பெண்ணை மிரட்டி கொள்ளை! அதே வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உறவினராம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாயில் வீடு புகுந்து வயோதிப பெண்ணை மிரட்டி கொள்ளை! அதே வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உறவினராம்...

யாழ்.கோப்பாய் - பாலணை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டில் வயோதிப பெண் ஒருவர் மட்டும் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த இருவர் அவரை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையிட்டவர்களை குறித்த வயோதிப பெண் அடையாளம் காட்டியுள்ளார். 

இதன்படி அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் உறவினரே கொள்ளையில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகின்றது. இரு வாரங்களுக்கு முன்னரும் அந்த குதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த வயோதிப பெண்ணை அச்சுறுத்தி 

தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு