யாழ்.வடமராட்சி - அல்வாயில் நீதிமன்ற பிடியாணைக்கு அமைய கைது செய்யபட்ட நபரின் பையில் சங்கிலி! விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - அல்வாயில் நீதிமன்ற பிடியாணைக்கு அமைய கைது செய்யபட்ட நபரின் பையில் சங்கிலி! விசாரணையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி..

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நபர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளதுடன், கொள்ளையடித்த சங்கிலியையும் பொலிஸார் மீட்டிருக்கின்றனர். 

நேற்றுப் புதன்கிழமை நெல்லியடிப் பொலிஸாரால் அல்வாய் தெற்கைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் பிடிவிறாந்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டைப் பையிலிருந்து தங்கச் சங்கிலி ஒன்று மீட்கப்பட்டது.

மேற்படி தங்கச் சங்கிலி உடுப்பிட்டிப் பகுதியில் அறுக்கப்பட்டதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்ட நிலையில் உரியவரும் அதனை அடையாளம் காட்டியதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு