யாழ்.மாவட்டத்திலுள்ள பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்..

யாழ்.மாவட்டத்தில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் என்ற விடயப்பரப்பில் வட்டமேசை கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருக்கின்றது. 

அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்வில் பெண் உற்பத்தி முயற்சியாளர்களின் சந்தேகங்கள் தொடர்பில் வங்கிகளின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டதோடு 

தமது வங்கிகளினால் வழங்கப்படும் இலகு கடன் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வில் விழுதுகள் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்திரேயி ஆற்றிவரும் பணிக்காக பெண் முயற்சியாளர்களால் அவருக்கு கௌரவிப்பும் செய்யப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு