யாழ்.அரியாலை - பூம்புகாரில் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிகாலையில் சுற்றிவளைப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை - பூம்புகாரில் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிகாலையில் சுற்றிவளைப்பு!

யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் இன்று அதிகாலை 4.30 இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 80 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டிருக்கின்றது. 

இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கஞ்சா மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.

பூம்புகார் கடற்கரையோரத்தில் இருந்து குறித்த கஞ்சாப் மூடைகள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் 

 யாழ்.நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு