மேல் மாடியில் வீட்டார் உறக்கம், கீழே கதவை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை! யாழ்.சுதுமலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மேல் மாடியில் வீட்டார் உறக்கம், கீழே கதவை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை! யாழ்.சுதுமலையில் சம்பவம்..

யாழ்.சுதுமலையில் உள்ள வீடொன்றில் மேல்மாடியில் வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது கீழே கதவை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டானது. மேல் மாடி வீடாகும். அந்த வீட்டில் வசிப்போர் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை, கீழ் வீட்டின் கதவினை நூதனமான முறையில் திறந்து உள்நுழைந்த கொள்ளையர்கள்,

கீழ் வீட்டில் இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டார் தூக்கத்தால் எழுந்து கீழே வந்த போது , வீட்டின் கதவு திறந்து இருப்பதனை கண்ணுற்று வீட்டினுள் பணம் வைத்த இடத்தை பார்த்த போது , 

அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ், நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு