யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் ஹெரோயினுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் ஹெரோயினுடன் கைது!

யாழ்.சுழிபுரம் பகுதியில் 5 கிராம் 120 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 17 வயது சிறுவன் நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளான். 

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சிறுவன் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை அவனை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை நேற்று (07) 200 மில்லிக்கிராம் ஹெரோயினுடன் 22 வயதுடைய இளைஞன் ஒருவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று கைது செய்யப்பட்ட இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு