யாழ்.வலி,வடக்கில் 1614 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! அமொிக்க செனட் சபையின் வெளிவிவகார பிரிவு உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் 1614 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்! அமொிக்க செனட் சபையின் வெளிவிவகார பிரிவு உறுதி..

யாழ்.வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக அமொிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழு வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனை நேற்று மாலை நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. 

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ள நிலையில் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து ஒரு மணிநேரம் வரை தவிசாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தவிசாளர் சோ.சுகிர்தன், படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகள், பல ஆண்டுகளாகியும் மக்கள் மீள்குடியேற்றப்படாமை, 

படையினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பாக கேட்டறிந்துகொண்டனர். 1614 ஏக்கர் காணியை சுவீகரிப்பது தொடர்பாக கடந்த மாதம் சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் பிரதேச செயலருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் 

இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் தொடர்புடைய ஆவணங்களும் அமெரிக்க செனட் சபையின் குழுவினருக்கு கையளிக்கப்பட்டது. பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும், 

இதனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வோமெனவும் அமெரிக்க செனட் சபையின் குழுவினர் தெரிவித்தார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு