யாழ்.மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடி! காரணம் இதுதானாம் இராணுவ தளபதி விளக்கம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இராணுவ சோதனை சாவடி! காரணம் இதுதானாம் இராணுவ தளபதி விளக்கம்...

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்டுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள முக்கிய நகரங்களில் சோதனை சாவடிகள் அமைக்கும் பணியை இராணுவத்தினர் மேற்கொள்வர் எனவும், சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பர் எனவும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர கூறியுள்ளார். 

மாவட்டத்தல் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக 

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் வடமாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய நேற்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் ராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் பபோதை பொருள் பாவிப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும். 

எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவே நமது எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு