யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகைரதத்தில் மதுபோதையில் இருந்த அதிகாரி கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகைரதத்தில் மதுபோதையில் இருந்த அதிகாரி கைது!

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகைரதத்தில் உறங்கல் பெட்டிகளுக்குப் பொறுப்பான ஊழியர் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் புகைரத பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இந்த புகையிரதத்தின் பிரதான கட்டுப்பாட்டாளரினால் அனுராதபுரம் புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ​​ரயில்வே ஊழியரின் வாயிலிருந்து மது வாசனை வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்து குறித்த ஊழியரை அனுராதபுரம் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தியதில் அவர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த ஊழியர் மாளிகாவத்தை புகையிரத நிலைய அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு