வவுனியாவில் நடந்த கோர விபத்தை தொடர்ந்து ஆளுநர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! இனி மக்கள் அச்சப்படாமல் பேருந்தில் ஏறலாம்..

ஆசிரியர் - Editor I
வவுனியாவில் நடந்த கோர விபத்தை தொடர்ந்து ஆளுநர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை! இனி மக்கள் அச்சப்படாமல் பேருந்தில் ஏறலாம்..

வடமாகாணத்திலிருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளினதும் வழித்தட அனுமதிகளையும் A-9 வீதியில் சோதனையிடுவதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் வினவியோ போது மேற்கண்டவாறு தெரிவித்தார்குறித்த விபத்து விடயம் தொடர்பில் நான் பொலிஸ்தரப்பு மற்றும் ஏனைய தரப்புகளிடம் விசாரணை அறிக்கையினை கேட்டுள்ளேன். 

அத்தோடு இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணை குழுவின் தலைவரோடு ஒரு உரையாடலை மேற்கொண்டு சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம் அதாவது யாழ் - கொழும்பு மற்றும் ஏனைய தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் வடக்கு மாகாணத்திற்குள் 

ஒரு இடத்தில் ஒவ்வொரு நாளும் வழித்தட அனுமதியினை பரிசோதிப்பது வழித்தடம் இல்லாதுபயணிக்கும் பேருந்துகளுக்கு உடனடியாகவே 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் அறவிடட்படவுள்ளதோடுA-9 பாதையில் ஏதோ ஒரு இடத்தில் பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி 

சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கான ஒரு முயற்சியினை எடுத்துள்ளோம் அத்தோடு ஒவ்வொரு மாத கடைசியிலும் தூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் தரப் பரிசோதனையினை உறுதிப்படுத்தும் பரிசோதனையினையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கான நேர கட்டுப்பாடு ஒன்றிணையும் விதிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் குறிப்பாக யாழ் - கொழும்பு வழித்தட அனுமதி 134 பேர் பெற்றுள்ளபோதிலும் அரை வாசி பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றது எனவே சேவையில் ஈடுபடாத பேருந்து வழித்தட அனுமதிகளை பெயர் மாற்றுவதற்குரிய ஒரு முயற்சியும் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே அனைத்து விடயங்களும் இன்றைய தினம் தேசிய போக்குவரத்து ஆணை குழுவின் தலைவருடன் உரையாடி முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் வடக்கில் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை குறைக்க முடியும் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு