தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர் யாழ்.நகரில் கைது!

ஆசிரியர் - Editor I
தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர் யாழ்.நகரில் கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிற்குள் புகுந்து வாளவெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ்.நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நான்கு பேர் கொண்ட கும்பலால் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபரொருவர் ஏற்கனவே நீதிமன்றில் சரணடைந்த நிலையில், 

பிரதான சந்தேக நபரையும் ஏனையர்களையும் பொலிஸார் தேடி வந்தனர். பிரதான சந்தேக நபர் நேற்றைய தினம் யாழ் நகரப் பகுதியில் நடமாடிய போது, யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸிரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். கைதானவர் தெல்லிப்பழையைச் சேர்ந்த 34வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு