யாழ்.பருத்தித்துறை - புலோலியில் கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்! 35 பவுண் நகை கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - புலோலியில் கூரை பிரித்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்! 35 பவுண் நகை கொள்ளை..

யாழ்.வடமராட்சி - புலோலி புற்றளை பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் சுமார் 35 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மாலை வேளையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் கூரை ஓட்டைக் கழற்றி உள்ளிறங்கிய திருடர்கள் வீட்டை சல்லடை போட்டு தேடுதல் நடத்தி அங்கிருந்த 35 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியில் சென்றவர்கள் வீட்டின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்று வீட்டில் சென்று பார்த்தபோதே அங்கிருந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு