யாழ்.இணுவில் பகுதியில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு! ஆவா என கூறப்படும் வினோதன் வாளுடன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் பகுதியில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு! ஆவா என கூறப்படும் வினோதன் வாளுடன் கைது..

தீபாவளி தினத்தன்று இணுவில் பகுதியில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஆவா என கூறப்படும் வினோதன் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீதிமன்றுக்கு சென்று திரும்பிய வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் கிழமை தீபாவளி தினத்தன்று 17 வயது சிறுவனை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல்,

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பித்தனர்.வாள்வெட்டுக்கு உள்ளானவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

அவர்களில் வினோதனும் வந்திருந்தார் என்று வாள்வெட்டுக்குள்ளானவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த வினோதன் நேற்று பிற்பகல் நீதிமன்றிலிருந்து வெளியேறிய நிலையில் கைது செய்யப்பட்டதுடன் 

வாள் ஒன்றும் அவரிடம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு