வீதியால் பயணித்தவரை வழிமறித்து பணப் பையை பறித்து 1500 பணத்தை எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் முறைப்பாடு!

ஆசிரியர் - Editor I
வீதியால் பயணித்தவரை வழிமறித்து பணப் பையை பறித்து 1500 பணத்தை எடுத்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் பணப் பையை பறித்து 1500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளில் கலைத்துக் கொண்டு வந்து நிறுத்தி நீ விபத்து ஏற்படுத்தும் முகமாக பயணிக்கிறாய் உனக்கு நீதிமன்றத்திற்கு வழக்கு எழுதப்போகின்றேன் எனக்கூறி வழிமறித்து அவரை விசாரித்ததோடு 

அவரின் பணப்பையினை பறித்து 1500 ரூபா பணத்தினை எடுத்துவிட்டு பணப்பையை திருப்பி கொடுத்துச் சென்றதாக  கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவ தொடர்பில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு