யாழ்.காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தில் திருட்டு! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தில் திருட்டு! சந்தேகநபரை மடக்கியது பொலிஸ்..

யாழ்.காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தின் குருக்கல் தங்குமிடத்தில் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொறுப்பதிகாரி உபுல் செனதிரத்ன தலமையில்,

பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருடப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்திருந்த நிலையில் 

அந்த பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மீட்கப்பட்ட பொருட்களுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு