யாழ்.மாநகரசபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கு புதிய தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு..!

யாழ்.மாநகரசபைக்கு நொதேண் சென்றல் தனியார் வைத்தியசாலையின் ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் சுமார் 2 கோடி பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. 

இன்று(05) காலை 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த தீயணைப்பு வாகனம்  யாழ் மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நொதோர்ன் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினர், 

யாழ் மாநகர முதல்வர், யாழ் மாவட்ட செயலர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தீயணைப்பு படை பிரிவு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு யாழ் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படைவாகனம் விபத்தில் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில் யாழ் வணிகர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் 

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால் குறித்த வாகனம் யாழ் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. இதன்போது தீயணைப்பு வாகனம் சம்பிரதாய பூர்வமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு