யாழ்.அராலியில் வீடு உடைத்துக் கொள்ளை! செத்த வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் வீடு உடைத்துக் கொள்ளை! செத்த வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

யாழ்.அராலி பகுதியில் வீடொன்றை உடைத்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சுமார் 6 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

வீட்டில் இருந்தவர்கள் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. 

வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டதுடன் , வீட்டில் வைத்திருந்த 06 பவுண் நகை திருட்டு போய்யுள்ளமையை தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு