யாழ்.எழுவைதீவில் இன்று காலை பாரிய எதிர்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுவைதீவில் இன்று காலை பாரிய எதிர்ப்பு போராட்டம்..!

யாழ்.எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக சுமார் 4 பரப்பு காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையினை எதிர்த்து இன்று காலை காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர். 

யாழ் ஊடக அமையத்தில் இது குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வலி,வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் த.சஜீவன் இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் குறிப்பாக வடகிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூழலில் வாழும்போதும் 

காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை தெரிவித்து இருப்பதால் அவருடன் சேர்ந்து பொது அமைப்புகள் அரசியல் பிரமுகர்கள் இன்று காலை 9 மணிக்கு நில அளவை தடுப்பதற்காக ஒன்றுகூட வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு