கள்ளனிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்...!

ஆசிரியர் - Editor I
கள்ளனிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட இளவாலை பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்...!

யாழ்.இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை விடுவிப்பதற்காக வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதி வைத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றிருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதானார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் கேட்ட சம்பவம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில் அவர்களது ஆலோசனையின் கீழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைதானார்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு