யாழ்.ஆடியபாதம் வீதியில் மின்வெட்டு நேரத்தில் உணவகத்தை உடைத்து சமையல் எரிவாயு சிலின்டர் திருட்டு!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆடியபாதம் வீதியில் மின்வெட்டு நேரத்தில் உணவகத்தை உடைத்து சமையல் எரிவாயு சிலின்டர் திருட்டு!

யாழ்.திருநெல்வேலி - ஆடியபாதம் வீதியில் உள்ள  உணவகம் ஒன்றை உடைத்த திருடர்கள் அங்கிருந்து எரிவாயு சிலின்டரை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மின்வெட்டு அமுலிலிருந்த இரவு-8 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட  நேர பகுதியில் 

மேற்படி உணவகத்தின் முன்பக்கப் பக்க வாயில்பூட்டு உடைக்கப்பட்டு அதன் ஊடாக உள்நுழைந்த திருடர்கள் உணவகத்தில் இருந்த 

எரிவாயு சிலிண்டரைத் திருடி சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு