விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ..! 3 பிள்ளைகளின் தாய் மரணம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள சாவகச்சோி பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ..! 3 பிள்ளைகளின் தாய் மரணம், பொதுமக்களின் உதவியை நாடியுள்ள சாவகச்சோி பொலிஸார்..

யாழ்.மீசாலை விபத்தில் காயமடைந்த 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 14ம் திகதி பாடசாலையில் தனது பிள்ளைக்கு உணவு கொடுப்பதற்காக சென்றிருந்த நிலையில் மீசாலை ஐயா கடை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது 

மோதி விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.  சம்பவத்தில் படுகாயமடைந்த மீசாலை வடக்கை சேர்ந்த சிறீதரன் செல்வராணி(வயது52) 

என்பவரை பொதுமக்கள் மீட்டு சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றய தினம் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி தொடர்பாகவும், ஆட்டோ தொடர்பாகவும் 

தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் சாவகச்சோி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு