ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 தடவைகள் கைதான யாழ்.குருநகர் இளைஞனுக்கு கந்தகாட்டில் ஒரு வருடம் புனர்வாழ்வு! யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 தடவைகள் கைதான யாழ்.குருநகர் இளைஞனுக்கு கந்தகாட்டில் ஒரு வருடம் புனர்வாழ்வு! யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவு..

யாழ்.குருநகரில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை ஒரு வருடம் புனர்வாழ்வுக்குட்படுத்த யாழ்.நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டிருக்கின்றார். 

இந்நிலையில் 4வது தடவையாக நேற்றுமுன்தினம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவரை ஒரு வருடம் கந்தகாடு புனாழ்வு நிலையத்திற்கு அனுப்பி சிகிச்சை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு