யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்க காத்திருந்த பெண்ணிடம் 1000 ரூபாவை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய திருடன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்க காத்திருந்த பெண்ணிடம் 1000 ரூபாவை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய திருடன்..

மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை சுருட்டிய நபர் தப்பி ஓடிய சம்பவம் யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வயோதிப பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளார். 

இந்நிலையில் அங்குவந்த இளைஞன் ஒருவர் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. உடனடியாக மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தையும், போத்தலையும் வாங்கிக்கொண்டு

தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த பெண் ஏமாற்றத்துடன் அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறிவிட்டு சென்றிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு