யாழ்.திருநெல்வேலி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மரணம்..!

யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை மோதி தள்ளியதுடன், நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொக்குவில் கிழக்கு காளி கோவிலடியை சேர்ந்த வி.மிதுனராஜ் (வயது26) 

என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு