இன்று பிற்பகலுக்கு பின் வங்காள விரிகுடாவில் உருவாகிறது தாழமுக்கம்! வடகிழக்கில் கனமழை, யாழ்.பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
இன்று பிற்பகலுக்கு பின் வங்காள விரிகுடாவில் உருவாகிறது தாழமுக்கம்! வடகிழக்கில் கனமழை, யாழ்.பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று பிற்பகலுக்கு பின்னர் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக வடபகுதிக்கு எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் ஞாயிற்று கிழமை வரையல் கனமழை கிடைக்கப்பெறும். 

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக புவியியல்துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தொிவித்திருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் தொிவித்துள்ளதாவது. இன்று உருவாகும் தாழமுக்கம் நகர்வதற்கு இரு வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. 

இலங்கையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் ஊடாக மேற்குநோக்கி நகர்ந்து அரபி கடலை சென்றடையும் அல்லது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக வடக்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாபகுதியில் அரபி கடலை சென்றடையும். 

இரு பகுதிகளுக்கு ஊடாகவும் நகர்வதற்கான வாய்ப்புக்கள் சமனான அளவிலேயே உள்ளதால் நகர்வு பாதை தொடர்பில் இறுதியான தகவல்களை அடுத்துவரும் நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும். எந்த திசையில் நகர்ந்தாலும் எதிர்வரும் 3ம் திகதி வியாழன் தொடக்கம் 

6ம் திகதி சனிக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமான அல்லது மிக கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுதினம் 2ம் திகதி புதன்கிழமை தொடக்கம் 

இலங்கையின் வடக்கு கிழக்கு தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வது மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு