யாழ்.மாவட்டத்தில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்! யாழ்.மாவட்ட செயலர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்! யாழ்.மாவட்ட செயலர் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ள நிலையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் பெற்றோல் பொதுமக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில்  போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள நிலையில் தொடர்ச்சியாக எரிபொருளைப் பெறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஆகவே செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடவேண்டாம் அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் 

பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு