யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை..! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்ட பல இலட்சம் ருபா பொருட்கள் திருடப்பட்டுள்ள நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல்மாடி கட்டட வேலைக்காக வைக்கப்பட்ட பொருட்களே இரவோடிரவாக திருடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியசாலையில் இரவு நேரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் 

கடமையில் இருந்த நிலையில் வைத்தியசாலையின் பின்புற வாசலால் கனகர உழவு இயந்திரம் மூலம் பொருட்கள் ஏற்றப்பட்டு முன்பக்க வாயினால் வெளியே எடுத்த செல்லப்பட்டுள்ளது. சம்பவத்தில் வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் 

ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சு அசமந்தப் போக்கில் செயல்படுவதாக ஒப்பந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு