வீதியில் கண்டெடுக்கப்பட்ட பண பையை உரியவர்களிடம் ஒப்படைத்த இராணுவம்! யாழ்.பருத்தித்துறையில்..

ஆசிரியர் - Editor I
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பண பையை உரியவர்களிடம் ஒப்படைத்த இராணுவம்! யாழ்.பருத்தித்துறையில்..

யாழ்.வல்வெட்டித்துறை வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் இன்று இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறைப் பகுதியில் வீதியில் பணப்பை ஒன்று தவற விடப்பட்ட நிலையில் 

அதனை மீட்ட இராணுவத்தினர் குறித்த பணப்பையில் 20 ஆயிரம் ரூபா பணம் இரண்டு வங்கி அட்டைகள் தேசிய அடையாள அட்டை என்பன காணப்பட்ட நிலையில்,

வல்வெட்டித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உரியவர் அடையாளம் காணப்பட்டு பொலிசார் முன்னிலையில் குறித்த பணப்பை ஒப்படைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு