யாழ்.தெல்லிப்பழை - கட்டுவனில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு முற்றுகையில் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - கட்டுவனில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு முற்றுகையில் ஒருவர் கைது!

யாழ்.தெல்லிப்பழை - கட்டுவன் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி இடமொன்றை தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெல்லிப்பழை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆயிரம் லிட்டர் கோடா மற்றும் 20 லிட்டர் கசிப்பு, கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்ழைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு