யாழ்.உரும்பிராயில் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருட்டு! ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு, கைதானவர் தேடப்படும் குற்றவாளியாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயில் வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருட்டு! ஒருவர் கைது, மற்றொருவர் தலைமறைவு, கைதானவர் தேடப்படும் குற்றவாளியாம்..

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை திருடி அதனை கோண்டாவில் பகுதியில் பதுக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிள் கொள்ளையிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில், 

விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மறைகாணி பதிவுகள் அடிப்படையில் உடுவில் பகுதியை சேர்ந்த 24 வயதான நபரை கைது செய்துள்ளனர். மேலும் கோண்டாவில் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. 

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் தலைமறைவாகியுள்ளார். இதேவேளை கைதான நபர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் தேடப்பட்டுவந்தவர் என கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு