சம்பளத்தை அதிகரி..! முன்பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில்..

ஆசிரியர் - Editor I
சம்பளத்தை அதிகரி..! முன்பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில்..

வடமாகாணத்திலுள்ள முன்பள்ளிகளில் ஆசிரியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறுகோரி ஆளுநர் செயலகம் மற்றும் மாவட்டசெயலகத்துக்கு முன்னால் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசாங்கத்தினால் தமக்கு வழங்கப்படுகின்ற 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் போதாது சம்பளத்தை அதிகரி என கோஷமிட்டனர். நாளுக்கு நாள் உயர்ந்த செல்லும் பொருட்கள் விலையேற்றத்தினால் 

தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் தமக்கான நியாயமான ஒரு சம்பளத்தை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனைத் தொடர்பு கொண்டுகேட்டபோது முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விடயம் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் நிலவுகிறது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில் மாகாணத்துக்கு ஒதுக்கப்படுகின்றன நிதியில் இருந்து அதிக தொகையை வழங்குவது கடினமாகக் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு