யாழ்.வட்டுக்கோட்டையில் மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் மாட்டுவண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலி..

யாழ்.வட்டுக்கோட்டை - யாழ்ப்பாண கல்லுாரி மைதானம் அருகில் மாட்டு வண்டில் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். 

குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ள. மாட்டுவண்டிலின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த முளாய் பகுதியை சேர்ந்த சி.லோகேஸ்வரன் (வயது32) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு