ஊடக அமைச்சருடனான சந்திப்பில் கறுப்புபட்டியுடன் யாழ்.ஊடகவியலாளர்கள்..!

ஆசிரியர் - Editor I
ஊடக அமைச்சருடனான சந்திப்பில் கறுப்புபட்டியுடன் யாழ்.ஊடகவியலாளர்கள்..!

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப் பெருவுக்கும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டி அணிந்து சென்றிருந்தனர். 

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்காமையினை 

சுட்டிக்காட்டுவதுடன், தொடரும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பை காட்டும் முகமாக யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றிருந்தனர்.

ஊடகவிலாளர்கள் கறுப்பு பட்டி அணிந்திருந்ததை அவதானித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும நானும் ஒரு ஊடகவியலாளனாக மூன்று பத்திரிகைகளில் கடமையாற்றியதாக குறிப்பிட்டு 

ஊடகவியலாளர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு தான் மதிப்பளிப்பதாக தெரிவித்தார். அத்துடன் அவர்களின் நிஜயமான கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு