பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடரும் கையெழுத்துவேட்டை..! சர்வமத தலைவர்களும் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தொடரும் கையெழுத்துவேட்டை..! சர்வமத தலைவர்களும் பங்கேற்பு..

பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்யக்கோரி கையெழுத்து பெறும் போராட்டம் யாழ்.நெல்லியடி பகுதியில் இடம்பெற்றது.

இன்று காலை வடமராட்சி, நெல்லியடி பேருந்து நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ச்சியான கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த போராட்டத்தில் சர்வ சமய தலைவர்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு