கொழும்பை தொடர்ந்து யாழ்.நகரிலும் கையெழுத்து போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
கொழும்பை தொடர்ந்து யாழ்.நகரிலும் கையெழுத்து போராட்டம்..!

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றது.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தை, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், ஆனல்ட், சயந்தன் ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், 

உறுப்பினர்கள், மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்களும் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு