யாழ்.வேலணை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணை பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது..!

யாழ்.வேலணை பகுதியில் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த என்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கஞ்சாவுடன் ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வேலணை ஜே/17 ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு