யாழ்.அல்லைப்பிட்டியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்! பரிசோதனையில் கொரோனா தொற்றும் உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அல்லைப்பிட்டியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்! பரிசோதனையில் கொரோனா தொற்றும் உறுதி..

காய்ச்சல் காரணமாக வீதியில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அல்லைப்பிட்டியை சேர்ந்த ஜேசுதாஸன் ஸ்ரனிஸ்லோஸ் (வயது26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளான். கடந்த 10ம் திகதி காய்ச்சல் காரணமாக பனடோல் பயன்படுத்திய குறித்த இளைஞன், 

தொடர்ந்து காய்ச்சல் காய்ந்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளார். எனினும் காய்ச்சல் குறையாத நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். இறப்பின் பின் அவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு