யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் மன்றில் ஆஜராகாத சந்தேகநபர்களுக்கு பிடியாணை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் மன்றில் ஆஜராகாத சந்தேகநபர்களுக்கு பிடியாணை..!

யாழ்.நீதிமன்றம் தாக்கப்பட்ட வழக்கிற்கு சமூகமளிக்காத சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வித்தியா கொலை தொடர்பாக செய்யப்பட்ட நபர்கள் யாழ்.நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்குதலுக்குள்ளானது யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 

ஊடகவியலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக யாழ்.பொலிசாரால் வழக்கு தொடுக்கப்பட்டு வழக்குகள் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறு வழக்கு நேற்றையதினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சமூகமளிக்காத அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்தவர் உட்பட மூவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு