3வது நாளாகவும் தொடரும் முடக்க போராட்டம்..! பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெளிமாவட்ட மீனவர் அமைப்புக்களும் பேராதரவு..

ஆசிரியர் - Editor I
3வது நாளாகவும் தொடரும் முடக்க போராட்டம்..! பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெளிமாவட்ட மீனவர் அமைப்புக்களும் பேராதரவு..

யாழ்.பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் 3வது நாளாகவும் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் 

இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்ற நிலையில் 

முல்லைத்தீவு மாவட்ட மீனவ அமைப்புகளும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் நேரடியாக போராட்ட களத்துக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.

அத்தோடு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனும் முல்லைத்தில் இருந்து வருகைதந்து போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தனர்.

இன்று காலை போராட்டகாரர்களுடன் பேசுவதற்காக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படையினர், பொலிஸார் 

மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் வருகைதந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் 

எந்தவிதமான முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகள் திரும்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு