யாழ்.புன்னாலை கட்டுவனில் இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸாரினால் சகோதரர்கள் இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலை கட்டுவனில் இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸாரினால் சகோதரர்கள் இருவர் கைது..!

யாழ்.புன்னாலைக்கட்டுவன் - காளியாவத்தை பகுதியில் 23 மற்றும் 36 வயதான சகோதரர்கள் இருவர் இராணுவ புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், 

புலனாய்வு பிரிவினரும் - பொலிஸாரும் இணைந்து இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் 

கஞ்சாவினை சிறு சிறு பொதிகளாக கட்டியும், வேறொரு பையில் உதிரியாகவும் அதனை உடமையில் வைத்திருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு